Monday 5 November 2012

லோக் அதாலத்: காசோலை மோசடி வழக்குகளுக்கு தீர்வு
தூத்துக்குடியில் மாவட்ட சட்டமன்ற பணிகள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட நீதிபதியுமான பிரபுதாஸ் தலைமையில் மெகா மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் உரிமையியல் மற்றும காசோலை மோசடி வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில் 3 உரிமையியல் வழக்குகளுக்கும், 2 காசோலை வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டன.இதில், ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.கே.சங்கர நாராயணன், நீதிபதிகள் கிருஷ்ணவள்ளி, ஹேமா, வழக்கறிஞர் லிசி ஜாய் அந்தோணியம்மாள், மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான டி.வி.மணி செய்திருந்தார்.